கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.இந்த சம்பவம் ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் ‘எனது மகள் கொலை தொடர்பான கதையை திரையிட அனுமதிக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Infosys techie Swathy murder case becomes a movie, which is yet to be release. But Swathy's father Santhana Gopalakrishnan gave a complaint in the police station regarding the movie's release.