கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் பரிவார தெய்வங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ முருகப்பெருமானுக்கு கார்த்திகை மாத கிருத்திகை விசேஷ நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலய ஸ்தானிகர் வசந்த் சர்மா பரிவார தெய்வங்களில் ஒன்றான முழுமுதற்கடவுளான அருள்மிகு ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை நடத்தினார்