உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் பந்தயமான மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் முதல்முறையாக தற்சமயம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. டெல்லிக்கு அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் இந்த பந்தயங்கள் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி துவங்கின. 3 நாட்கள் நடைபெறும் இந்த பந்தயங்கள் செப்டம்பர் 24ஆம் தேதி நிறைவடையும்.