Surprise Me!

தாமிரபரணியில் 16,000 கன அடி தண்ணீர் திறப்பு; 3-வது நாளாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!

2025-11-25 7 Dailymotion

திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், இன்று 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக, நெல்லையில் தொடர் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடர் கனமழையால், மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனால், நேற்று இரவு மணிமுத்தாறு அணையிலிருந்து 4,000 கன அடி தண்ணீரும், பாபநாசம் அணையிலிருந்து 12 ஆயிரம் கன அடியும் தாமிரபரணியில் திறந்து விடப்பட்டது. 

மேலும், இன்று காலை நிலவரப்படி, மணிமுத்தாறு அணைக்கு 4,972 கன அடியும், பாபநாசம் அணைக்கு 9,266 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுதவிர கடனா அணையிலிருந்து வரும் தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.

எனவே, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, குறுக்குத்துறை முருகன் கோயிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.