வேலூர்மாவட்டம்,அனைக்கட்டில் கெங்கநல்லூரில் பசுமைதாயகம் மற்றும் பாமக சார்பில் மகளிர் உரிமை மீட்பு பயணம் சிங்கப்பெண்ணே எழுந்துவா நிகழ்ச்சி நடைபெற்றது இதனை பசுமைதாயகம் தலைவர் சௌமியா அன்புமணி துவங்கி வைத்தார் இதில் பாமக மாவட்ட செயலாளர் ஜெகன்,மாவட்டத்தலைவர் வெங்கடேசன் முன்னாள் அமைச்சர் என்.டி,.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் பசுமைதாயகம் தலைவர் சௌமியா அன்புமணி பேசுகையில் தற்போது தேர்தல் வருகிறது இலவச திட்டங்கள் வரும் ஆயிரமோ 3 ஆயிரம் 5 ஆயிரம் கொடுத்து பெண்களை ஆட்சியாளர்கள் ஏமாற்றபார்க்கின்றனர் இதன் மூலம் டாஸ்மாக் கடைகளை அதிகரிப்பார்கள் ஆனால் அதனை மூடவில்லை ஓட்டு வாங்கும் வரையில் மக்களிடம் பதமாக நடப்பார்கள் அதற்கு பிறகு குழந்தைகளின் தலை எழுத்தையே மாற்று எழுது வார்கள் . என பேசினார் .