கலைச்செல்வனுக்கு மிக மிகப் பிடித்த அட்னான் சாமியின் பாடல்கள். அவன் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் இந்தப் பாடல்களை போட்டுக்கேட்க விடுவான். அவனது இறுதி வழியனுப்பல் நிகழ்வின்போது தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருந்த பாடல்கள். அவனது நினைப்பு வரும்போதெல்லாம் இந்தப்பாடல்களைக் கேட்பேன். இந்தப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அவனது கெக்கட்டமிட்டுச் சிரிக்கும் முகம் நினைவுத் திடல்களெங்கும் வியாபித்துவிடும். அவன் வந்துபோன பேர்கன் இலக்கியச் சந்திப்பும் மறக்க முடியாதது.
-தமயந்தி-